Thursday, 20 November 2014

Poems

Sad

விட்டு விட்டேன் உன்னோடான என் உறவுகளை 
விடாமல் தவிக்கிறேன் உன்னோடான நம் நினைவுகளை 

Saturday, 25 October 2014

வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன்னில் உயிர் வாழ்ந்திட 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன் மீசை குற்றி முத்தம் பெற 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
நித்தம் உன் மார் சாய்ந்து உறங்கிட 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன் முகம் பார்த்து துயில் களையும் 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன் உறக்கத்தில் உன்னை ரசிக்கும் 
வரம் ஒன்று வேண்டும்  

வரம் ஒன்று வேண்டும் 
என்னுள் உன் உயிரை சுமந்திட 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
நான் சுமந்த உயிரும் உன் உருவாய் மாறிட 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
அனுதினமும் உன்னை ரசித்திடவே 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன்னை ரசித்திகொண்டே நான் இறந்திடவே 
ஒரு வரம் வேண்டும் 

Thursday, 9 October 2014

கோலை இதயம்

உன்னை  மன்னிக்க தெரிந்த எனக்கு 

நீ தந்த வலியை மறக்க தெரியவில்லை  

நித்தம் வலியை சுமந்து 

உன்னை விரும்பும் 

கோலை இதயம் இது 

உன்னை இழக்க பயந்து 

தன்னை இழக்கிறது 

Saturday, 4 October 2014

தெரு விளக்கி

தெரு விளக்கின் மடியில்
விழித்து படித்தேன்
தெரியாத நாளைக்காக 

விளக்கின் ஒளியில்
விழித்து சொப்பனம்  கண்டேன்
எதிர்கால ஒளியிட்காக 

Friday, 3 October 2014

உன்னில் காதல் விதைகுதட

சோலை பசுங்கிளியே
காலை கதிரொளியே
கதிரின் விட்ச்சினிலே
உன்னில் காதல் வசம் இழந்தேன்
பொன்னில் செய்த
உடலோ
அன்றி
பூவில் செய்த இதழோ
கண்ணில் காந்த அலையோ
அன்றி
காதல் செய்யும் வினையோ
என்னை இழுக்குதடி
உன்னில் காதல் விதைகுதடி

உன்னை சேர துடிக்கிறது

என்னை தீண்டும் தென்றலே
என்னவன் காதில்
சொல்லி விடு
அவன் தேகம் தீண்டும் தென்றல்
என் இதயம் சொல்லும்
காதலை சுமந்து
உன்னை சேர துடிக்கிறது என்று