sumi in kavithaigal
Thursday, 20 November 2014
Saturday, 25 October 2014
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன்னில் உயிர் வாழ்ந்திட
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன் மீசை குற்றி முத்தம் பெற
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
நித்தம் உன் மார் சாய்ந்து உறங்கிட
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன் முகம் பார்த்து துயில் களையும்
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன் உறக்கத்தில் உன்னை ரசிக்கும்
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
என்னுள் உன் உயிரை சுமந்திட
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
நான் சுமந்த உயிரும் உன் உருவாய் மாறிட
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
அனுதினமும் உன்னை ரசித்திடவே
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன்னை ரசித்திகொண்டே நான் இறந்திடவே
ஒரு வரம் வேண்டும்
Thursday, 9 October 2014
கோலை இதயம்
உன்னை மன்னிக்க தெரிந்த எனக்கு
நீ தந்த வலியை மறக்க தெரியவில்லை
நித்தம் வலியை சுமந்து
உன்னை விரும்பும்
கோலை இதயம் இது
உன்னை இழக்க பயந்து
தன்னை இழக்கிறது
Saturday, 4 October 2014
தெரு விளக்கி
தெரு விளக்கின் மடியில்
விழித்து படித்தேன்
தெரியாத நாளைக்காக
விளக்கின் ஒளியில்
விழித்து சொப்பனம் கண்டேன்
எதிர்கால ஒளியிட்காக
Friday, 3 October 2014
உன்னில் காதல் விதைகுதட
சோலை பசுங்கிளியே
காலை கதிரொளியே
கதிரின் விட்ச்சினிலே
உன்னில் காதல் வசம் இழந்தேன்
பொன்னில் செய்த
உடலோ
அன்றி
பூவில் செய்த இதழோ
கண்ணில் காந்த அலையோ
அன்றி
காதல் செய்யும் வினையோ
என்னை இழுக்குதடி
உன்னில் காதல் விதைகுதடி
உன்னை சேர துடிக்கிறது
என்னை தீண்டும் தென்றலே
என்னவன் காதில்
சொல்லி விடு
அவன் தேகம் தீண்டும் தென்றல்
என் இதயம் சொல்லும்
காதலை சுமந்து
உன்னை சேர துடிக்கிறது என்று