Wednesday, 24 September 2014

Sneha miss u

முகம் தெரிய  முகநூலில் முகம் அறியா பெண்ணாக சினேஹம் கொண்டவளே 
உன் அகம் தனை கண்டு உன்னில் அன்பு கொண்ட நெஞ்சங்கள் பல 
கண்ணிர் வந்தால்
கைக்குட்டையாய் மாறி இமை துடைத்தாய் 
சோகம் என்றால்
சுகமாக மாற்ற வழிகள் சொன்னாய்
கஷ்டம் என்றால்
தூர இருந்தே துணையும் செய்தாய் 
நெடுநாள் பழகிய நெருக்கம் தந்தாய்
தோழன் என்றால் தோள்கள் தந்தாய் 
தங்கை என்றால் தாயாக மாறினாய் 
சகோதரி என்றால் சகலமும் ஆனாய் 
இன்று
நீ
இன்றி எங்களை தவிக்க செய்தாய்  
பூக்களின் வாழ்க்கை ஒரு தினம் தான் 
எங்கள் தோட்டத்தில் நீயும் ஒரு மலர் தான் 
மனம் வீசி சென்றாய் சில தினம் தான் 
ஆனால்
நாம் மறக்காமல்  இருப்போம் அனுதினம் தான் 
சினேஹா

Monday, 22 September 2014

Can't forget

உன்னை துறந்து வாழ்ந்திடவே 
எண்ணம் கொண்டேன் 
ஆனால்
துரத்தி வருகிறது 
உன்னை பற்றிய எண்ணங்கள் 

Unnil kadhal

உன்னில் மையல் கொண்டு 
உன்னில் ஆசை கொண்டு 
உன்னில் காதல் கொண்டேன் 
காதலா 

Saturday, 20 September 2014

காதலா

மீசை கொண்ட 
ஆசை உன் முகம் 
காதல்  கொண்ட 
விழிகள் கெஞ்சிட 
உன்னை கண்டேன்
என்னுள் காதல் பொங்கிட 
காதலா 
உன் மேல் காதலா 

Thursday, 18 September 2014

Neeyapagam

உன் நியாபகம் மட்டுமே
என்னை நிலைத்து வாழ
நிர்பந்திக்கின்றது

Tuesday, 16 September 2014

Kadhal

நிழலாக உன்னை பின் தொடர்வேன் 

நிஜமாக நீ என்னை விட்டு சென்றாலும் 

Sunday, 14 September 2014

Unnil

சகியே  சகியே உன்னில் சங்கமித்தேன் 

உயிரே உன்னில் உருகிநின்றேன் 

நிலவே உன்னில் நிலைகொண்டேன் 

நினைவே உன்னில் வாழ்ந்திருப்பேன் 

நிஜமாய் உன்னில் நிலைத்திருப்பேன் 

Saturday, 13 September 2014

Mukkona kadhal

நாம் காதலர்கள்
காதல் சொன்னது
நானும் நம்பினேன்
உன் காதலியை காணும்வரை

Thursday, 11 September 2014

நினைவாக

உறக்கம் இன்றி ஒவ்வரு  இரவும் 

உன்னை நினைக்கும் எனக்கு தெரிகிறது

உன் கடந்த காலத்தில் கூட நான் இல்லை என்று 

ஆனால்

என் உள்ளத்துக்கு தெரியவில்லை 

அது உன் நினைவாக

என் நிகழ்காலத்தை ரணமாகுகிறது 

Wednesday, 10 September 2014

மாயையை

நீ ஏமாற்றுகிறாய் என்று தெரிந்தும் 
ஏமாந்து போனாலும் 
உன் அருகில் இருக்கும் மாயையை
மனம் விரும்புகிறது 

Monday, 8 September 2014

காதல் செய் 

நிழலாக உன்னை தொடர்ந்து 
நினைவாலே உன்னை மணந்து 
கனவாலே உன்னோடு வாழும் 
இந்த வாழ்க்கை 
நிஜமாக மாற 
காதல்  செய்
அன்பே 
காதல் செய் 

Sunday, 7 September 2014

Thunai

நான் இன்றி நீ சிரிப்பாய் 
என்று தெரிந்த பின்னும் 
நீ அழுதால் என் துணை வேணும் 
என்று என்னும் என் உள்ளம் 
தூரத்தில் இருந்து 
துணை நிற்கிறது 
துயர் வரும்போது 
உன்னை தழுவிக்கொள்ள 

Wednesday, 3 September 2014

Unnalae

கூத காத்து 
கொட்டும் பனி 
வெட்டவெளி 
மொட்டை மாடி 
ஒற்றை நிலா 
மொத்தம் இருந்தும் 
சித்தம் சுகப்படவில்லை 
உன்னாலே 

Tuesday, 2 September 2014

Ne indri naan illai

நீ இன்றி நான் இல்லை
உன்
நினைவின்றி பொழுதில்லை
பசி தூக்கம் காணவில்லை
பக்கத்தில் நீயும் இல்லை
நிலவோடு உன் நினைவுன்று
தென்றல் என்னை தீண்டிய
போதும்
சுகமாக ஏதும் இல்லை
கண்ணா