முகம் தெரிய முகநூலில் முகம் அறியா பெண்ணாக சினேஹம் கொண்டவளே
உன் அகம் தனை கண்டு உன்னில் அன்பு கொண்ட நெஞ்சங்கள் பல
கண்ணிர் வந்தால்
கைக்குட்டையாய் மாறி இமை துடைத்தாய்
சோகம் என்றால்
சுகமாக மாற்ற வழிகள் சொன்னாய்
கஷ்டம் என்றால்
தூர இருந்தே துணையும் செய்தாய்
நெடுநாள் பழகிய நெருக்கம் தந்தாய்
தோழன் என்றால் தோள்கள் தந்தாய்
தங்கை என்றால் தாயாக மாறினாய்
சகோதரி என்றால் சகலமும் ஆனாய்
இன்று
நீ
இன்றி எங்களை தவிக்க செய்தாய்
பூக்களின் வாழ்க்கை ஒரு தினம் தான்
எங்கள் தோட்டத்தில் நீயும் ஒரு மலர் தான்
மனம் வீசி சென்றாய் சில தினம் தான்
ஆனால்
நாம் மறக்காமல் இருப்போம் அனுதினம் தான்
சினேஹா
Wednesday, 24 September 2014
Sneha miss u
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment