Thursday, 20 November 2014

Poems

Sad

விட்டு விட்டேன் உன்னோடான என் உறவுகளை 
விடாமல் தவிக்கிறேன் உன்னோடான நம் நினைவுகளை 

Saturday, 25 October 2014

வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன்னில் உயிர் வாழ்ந்திட 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன் மீசை குற்றி முத்தம் பெற 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
நித்தம் உன் மார் சாய்ந்து உறங்கிட 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன் முகம் பார்த்து துயில் களையும் 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன் உறக்கத்தில் உன்னை ரசிக்கும் 
வரம் ஒன்று வேண்டும்  

வரம் ஒன்று வேண்டும் 
என்னுள் உன் உயிரை சுமந்திட 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
நான் சுமந்த உயிரும் உன் உருவாய் மாறிட 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
அனுதினமும் உன்னை ரசித்திடவே 
வரம் ஒன்று வேண்டும் 

வரம் ஒன்று வேண்டும் 
உன்னை ரசித்திகொண்டே நான் இறந்திடவே 
ஒரு வரம் வேண்டும் 

Thursday, 9 October 2014

கோலை இதயம்

உன்னை  மன்னிக்க தெரிந்த எனக்கு 

நீ தந்த வலியை மறக்க தெரியவில்லை  

நித்தம் வலியை சுமந்து 

உன்னை விரும்பும் 

கோலை இதயம் இது 

உன்னை இழக்க பயந்து 

தன்னை இழக்கிறது 

Saturday, 4 October 2014

தெரு விளக்கி

தெரு விளக்கின் மடியில்
விழித்து படித்தேன்
தெரியாத நாளைக்காக 

விளக்கின் ஒளியில்
விழித்து சொப்பனம்  கண்டேன்
எதிர்கால ஒளியிட்காக 

Friday, 3 October 2014

உன்னில் காதல் விதைகுதட

சோலை பசுங்கிளியே
காலை கதிரொளியே
கதிரின் விட்ச்சினிலே
உன்னில் காதல் வசம் இழந்தேன்
பொன்னில் செய்த
உடலோ
அன்றி
பூவில் செய்த இதழோ
கண்ணில் காந்த அலையோ
அன்றி
காதல் செய்யும் வினையோ
என்னை இழுக்குதடி
உன்னில் காதல் விதைகுதடி

உன்னை சேர துடிக்கிறது

என்னை தீண்டும் தென்றலே
என்னவன் காதில்
சொல்லி விடு
அவன் தேகம் தீண்டும் தென்றல்
என் இதயம் சொல்லும்
காதலை சுமந்து
உன்னை சேர துடிக்கிறது என்று

உன் சந்தோஷத்திற்காக

ஒவ்வரு முறையும்
நீ ஏமாற்றுகிறாய்
என்று தெரிந்தும்
ஏமாந்து போகிறேன்
ஏமாற்றுவது நீ என்பதால்
நம் காதல் கானல் நீர்
என்று தெரிந்தும்
ஏமாந்து போகிறேன்
உன் சந்தோஷத்திற்காக

I இல்லையென்று தெரிந்தும் 

திசைகள் எட்டு  பார்கிறேன்  
எட்டு  திசையிலும் நீ இல்லையென்று தெரிந்தும் 

விழிகள் இரண்டும் நனைந்து நின்றேன் 
விழி துடைக்க உன் விரல் இல்லையென்று தெரிந்தும் 

கதறி அழுது கண்ணிற் விட்டேன் 
கதறிய போதும் காயம் ஆராதுஎன்று தெரிந்தும் 

விடியலோடு விழித்திருந்தேன் 
விடிந்தாலும் நீ வரமாட்டாய் என்று தெரிந்தும் 

Wednesday, 24 September 2014

Sneha miss u

முகம் தெரிய  முகநூலில் முகம் அறியா பெண்ணாக சினேஹம் கொண்டவளே 
உன் அகம் தனை கண்டு உன்னில் அன்பு கொண்ட நெஞ்சங்கள் பல 
கண்ணிர் வந்தால்
கைக்குட்டையாய் மாறி இமை துடைத்தாய் 
சோகம் என்றால்
சுகமாக மாற்ற வழிகள் சொன்னாய்
கஷ்டம் என்றால்
தூர இருந்தே துணையும் செய்தாய் 
நெடுநாள் பழகிய நெருக்கம் தந்தாய்
தோழன் என்றால் தோள்கள் தந்தாய் 
தங்கை என்றால் தாயாக மாறினாய் 
சகோதரி என்றால் சகலமும் ஆனாய் 
இன்று
நீ
இன்றி எங்களை தவிக்க செய்தாய்  
பூக்களின் வாழ்க்கை ஒரு தினம் தான் 
எங்கள் தோட்டத்தில் நீயும் ஒரு மலர் தான் 
மனம் வீசி சென்றாய் சில தினம் தான் 
ஆனால்
நாம் மறக்காமல்  இருப்போம் அனுதினம் தான் 
சினேஹா

Monday, 22 September 2014

Can't forget

உன்னை துறந்து வாழ்ந்திடவே 
எண்ணம் கொண்டேன் 
ஆனால்
துரத்தி வருகிறது 
உன்னை பற்றிய எண்ணங்கள் 

Unnil kadhal

உன்னில் மையல் கொண்டு 
உன்னில் ஆசை கொண்டு 
உன்னில் காதல் கொண்டேன் 
காதலா 

Saturday, 20 September 2014

காதலா

மீசை கொண்ட 
ஆசை உன் முகம் 
காதல்  கொண்ட 
விழிகள் கெஞ்சிட 
உன்னை கண்டேன்
என்னுள் காதல் பொங்கிட 
காதலா 
உன் மேல் காதலா 

Thursday, 18 September 2014

Neeyapagam

உன் நியாபகம் மட்டுமே
என்னை நிலைத்து வாழ
நிர்பந்திக்கின்றது

Tuesday, 16 September 2014

Kadhal

நிழலாக உன்னை பின் தொடர்வேன் 

நிஜமாக நீ என்னை விட்டு சென்றாலும் 

Sunday, 14 September 2014

Unnil

சகியே  சகியே உன்னில் சங்கமித்தேன் 

உயிரே உன்னில் உருகிநின்றேன் 

நிலவே உன்னில் நிலைகொண்டேன் 

நினைவே உன்னில் வாழ்ந்திருப்பேன் 

நிஜமாய் உன்னில் நிலைத்திருப்பேன் 

Saturday, 13 September 2014

Mukkona kadhal

நாம் காதலர்கள்
காதல் சொன்னது
நானும் நம்பினேன்
உன் காதலியை காணும்வரை

Thursday, 11 September 2014

நினைவாக

உறக்கம் இன்றி ஒவ்வரு  இரவும் 

உன்னை நினைக்கும் எனக்கு தெரிகிறது

உன் கடந்த காலத்தில் கூட நான் இல்லை என்று 

ஆனால்

என் உள்ளத்துக்கு தெரியவில்லை 

அது உன் நினைவாக

என் நிகழ்காலத்தை ரணமாகுகிறது 

Wednesday, 10 September 2014

மாயையை

நீ ஏமாற்றுகிறாய் என்று தெரிந்தும் 
ஏமாந்து போனாலும் 
உன் அருகில் இருக்கும் மாயையை
மனம் விரும்புகிறது 

Monday, 8 September 2014

காதல் செய் 

நிழலாக உன்னை தொடர்ந்து 
நினைவாலே உன்னை மணந்து 
கனவாலே உன்னோடு வாழும் 
இந்த வாழ்க்கை 
நிஜமாக மாற 
காதல்  செய்
அன்பே 
காதல் செய் 

Sunday, 7 September 2014

Thunai

நான் இன்றி நீ சிரிப்பாய் 
என்று தெரிந்த பின்னும் 
நீ அழுதால் என் துணை வேணும் 
என்று என்னும் என் உள்ளம் 
தூரத்தில் இருந்து 
துணை நிற்கிறது 
துயர் வரும்போது 
உன்னை தழுவிக்கொள்ள 

Wednesday, 3 September 2014

Unnalae

கூத காத்து 
கொட்டும் பனி 
வெட்டவெளி 
மொட்டை மாடி 
ஒற்றை நிலா 
மொத்தம் இருந்தும் 
சித்தம் சுகப்படவில்லை 
உன்னாலே 

Tuesday, 2 September 2014

Ne indri naan illai

நீ இன்றி நான் இல்லை
உன்
நினைவின்றி பொழுதில்லை
பசி தூக்கம் காணவில்லை
பக்கத்தில் நீயும் இல்லை
நிலவோடு உன் நினைவுன்று
தென்றல் என்னை தீண்டிய
போதும்
சுகமாக ஏதும் இல்லை
கண்ணா

Sunday, 31 August 2014

Love

காயம் கண்ட இதயம்
காதல் கொண்டது
காதல் கொண்ட இதயம்
காயம் கண்டது
இதுவே காதல் சக்கரம

Tears

நீ  கசக்கி எரிந்தது
காகிதம் அல்ல 
காதல் கொண்ட இதயத்தின் கண்ணீர் வார்த்தைகள் 

Saturday, 30 August 2014

Love

மதங்கள் என்னும் மதம் கொண்டு ஆடும்
மனிதர்கள் மத்தியில் 
மனம் கொண்ட காதலால்
மதிகேட்டு போனேன் 

Thursday, 28 August 2014

White rose

சாலை  ஓரம் பூக்கள் 
வீதி எங்கும் தூர 
பூக்கள் மீது பெண்ணாய்
ஒரு வெள்ளை ரோஜா நடக்க 
கண்ணில் கண்ட காட்சி 
என் உள்ளம் தன்னை தூண்ட 
காதல்  என்னும் கீதம் 
என் உள்ளமதில் உதித்தது
உன் மேல் பெண்ணே 

Saturday, 23 August 2014

Love

ஒவ்வரு மரத்திலும் ஒரு மலர் உண்டு 
ஒவ்வரு மலரிலும்  ஒரு விதை உண்டு 
ஒவ்வரு விதைக்குள்ளும் ஒரு மரம் உண்டு  

என்பது போல் 

ஒவ்வரு காதலிலும் ஒரு கஷ்டம் உள்ளது 
ஒவ்வரு கஷ்டத்திலும் ஒரு கண்ணீர் உள்ளது
ஒவ்வரு கண்ணீரிலும் இரு கண்கள் உள்ளது 
ஒவ்வரு கண்களிலும் ஒரு காதல் உள்ளது 

Friday, 22 August 2014

முத்து

இரண்டு சாக்கடை இணைந்து
உருவான முத்து என்பதால்
சாக்கடையில் எறியப்பட்டேன்
பெறுமதி இல்லாமல

Sunday, 17 August 2014

நின்னை சரணடைந்தேன

நின்னை சரணடைந்தேன்
உன் பேச்சிலே
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்
உன் விழியின் ஈர்ப்பிலே
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன் விரல்பிடித்து நடக்க
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன் இதழ் முத்தத்தில்
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன் கம்பீர ஆண்மையில்
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன் பிரிவை விரும்பாமல்
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன்னில் நானாய்
நின்னை சரணடைந்தேன

Ninaivu

இரவெல்லாம்
உன்னை எண்ணி விழித்திருப்பதால்
இரவெல்லாம்
கடந்து போகிறது இனிதே..
நான் மட்டும் கரைந்து போகிறேன் உன்
நினைவால்..

Pirivu

சகலமும் நீயான
பிறகும்...
சகித்து கொள்கிறேன்
பிரிவை

Saturday, 16 August 2014

Naan nee naam

நானாக  தனித்திருந்தேன்
நீயாக காதல் வந்தது 
இன்று 
நாமாக நம்மை திருமணம் மாற்றி தந்தது 

Nee indri

Thavaru

Pattathaari

படித்து முடித்து பகல் க னவு கண்டேன் ,
படிப்புக்கு வேலை
திறமைக்கு சம்மானம்
என் தந்தைக்கு ஒரு உறுதுணை
தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளை
தம்பிக்கு தகுந்த படிப்பு
தாய்க்கு மன நிறைவு
என்று கனவுகள் பல கண்டேன்
இன்று கனவெல்லாம்
கலைந்துபோனது
இந்த பிணம் தின்னும் மனிதர்கள்
முன்னிலையில்
இது படித்தவர் வாழும் உலகம்
அல்ல
பணம் படைத்தவர் வாழும் உலகம

Sad